இஸ்லாமிக் கல்லூரி

இன்ஷா அல்லாஹ் வரும் 07 /01 /2011
அன்று கீழக்கரையில் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சார்பாக " ஷர ஹுல் ஹிக்மா பெண்கள் தவ்ஹீத் கல்லூரி
தொடங்க இருக்கிறது அதற்க்கான மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது
இக் கல்லூரியில் ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடம் ஆலிமா பயிற்சியும்
தாய்மார்களுக்காக ஆறுமாத பயிற்சியும் நடைபெற உள்ளது இது பற்றி நகர்
TNTJ செயலாளர் சகோதரர் அஸ்கர் அலி கூறியதாவது இப்பயிற்சி போக
மேலும் ஆங்கில பேச்சு பயிற்சி கம்ப்யுட்டர் அடிப்படை பயிற்சி
பேச்சு திறன் பயிற்சி போன்ற முக்கியமான பயிற்சிகளும் வழங்கபடுவதாகவும்
இக் கல்லூரிக்கு வரும் மாணவியர்களுக்கு இலவச வாகன வசதியும்
செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் இக்கல்லூரியை ஆய்ஷா பீவி தவ்ஹீத் மதரசாவில்
வைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது கல்லூரியின் நிறுவனரும் மூத்த
தவ்ஹீத்வாதியுமான ஆய்ஷாஉம்மா அவர்கள் தனது சொந்த பொறுப்பில் நடத்த உள்ளார்கள்

Post a Comment

0 Comments