அல்லாஹ்வின் திருபெயரால் கடந்த 30 வருடங்களாக ஏகத்துவ பிரச்சாரத்தையும் மனித நேய பணிகளையும் ஒருகிணைந்து செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஒரு அங்கமான கீழக்கரை கிளையின் சார்பாக இஸ்லாத்தில் நுழைந்து இருக்கும் மூட நம்பிக்கைகளை கரம் கொண்டு தடுக்கும் வேலையில் இறங்கியது அதன் ஒரு பகுதியாக வாசலில் கருப்பு கயிறால் கட்டப்பட்டு இருக்கும் சீனாகாரம் என்ற பொருளை அந்த வீட்டின் உரிமையாளர்க்கு சத்தியத்தை எடுத்து சொல்லி அவர்களுக்கு விளக்கி அவர்கள் வீட்டிலேயே கத்தியை வாங்கி அதை வெட்டி எடுத்து கடலில் வீசினார்கள் அல்ஹம்துலில்லாஹ் அறியாமை காலத்து மூட நம்பிக்கைகளை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறினார்களே அதே போல் இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் மூட பழக்க வழக்கங்களை அல்லாஹ்வின் உதவி கொண்டு கடலுக்குள் மூழ் கடிப்போம் இன்ஷா அல்லாஹ்
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments