அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 2-1-2010 தேதியன்று கீழக்கரை தெற்கு தெருவில் TNTJ தெற்கு தெரு கிளையின் நிர்வாகி ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை நடத்தி வைக்க கீழக்கரை தெற்கு தெரு சுன்னத்? ஜமாத்திற்கு அழைப்பு விடுத்து நபிவழியில்தான் திருமணம் நடைபெறும் என்று உறுதியாக மணமகன் சொல்லிவிட்டார்.
திருமணதிற்கு வந்த சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் திருமண பதிவுபுத்தகத்தில் கையெழுத்து பெற்றவுடன் "நாங்கள் நபிவழியில் திருமணத்தை நடத்த மாட்டோம், மாறாக மாற்று மத கலாச்சாரத்தின் அடிப்படையில்தான் திருமணம் நடத்துவோம்" என்று அடம்பிடிக்க மணமகன் உறுதியாக நின்றவுடன் சுன்னத்? ஜமாஅத் புறக்கணித்து வெளியேறியது. திருமணம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து "இந்த திருமணம் செல்லாது" என்றும் "மணமகனை சுன்னத்? ஜமாத்தை விட்டும் விலக்கிவிட்டதாகவும் அறிவித்துள்ளது..............
"உங்கள் நிலையில் நீங்கள் செயல்படுங்கள், நாங்களும் செயல்படுகின்றோம்" என்று நம்பிக்கைகொள்ளாதவர்களிடம் கூறுவீராக...!........ -அல்குர்ஆன் : 11:121
0 Comments