இரத்த தான முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் 22 -01 -2011 அன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.................................!
ஆண்களை காட்டிலும் அதிகமாக பெண்கள் இரத்த தானம் செய்ததே இந்த முகாமின் சிறப்பு. இரத்தத்தை சேகரிக்க அதிக வசதி இல்லாததால் இரத்த தானம் செய்ய முடியாத மனக்குறையுடன் திரும்பி சென்றனர். இருந்தபோதிலும் தவ்ஹீத் ஜமாத்திற்கு அவசர காலத்தில் எந்த நேரமும் எங்களை அழைத்தால் இரத்தம் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக சொல்லிவிட்டு சென்றனர்.
முகாமை துவக்கி வைத்த நகராட்சி தலைவர் சகோ. பஷீர் அஹமது அவர்கள் பெண்கள் போட்டி போட்டு இரத்தம் கொடுப்பதை கண்டு ஆச்சர்யப்பட்டு சென்றார். எல்லாப்புகழும் இறைவனுக்கே.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
நகர் கிளை,தெற்குதெரு கிளை, மற்றும் 500 pilaat கிளை.
கீழக்கரை.

1.JPG


3.JPG
2.JPG


4.JPG
5.JPG


6.JPG

DSC01047.JPG

Post a Comment

0 Comments