இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்


அலாஹுவின் மாபெரும் கிருபையினால் இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்
நமது கிழக்கரை வடக்குத் தெருவை சார்ந்த காலி தாஸ் என்ற சகோதரர் ஏகத்துவ ஒளி பட்டு 04-2-2011 அன்று தம் வாயாலும் மனதாலும் கலிமாவை மொழிந்து அதன் அர்த்தம் விளங்கி இஸ்லாத்தை ஏற்றார். அவருக்கு அப்துல் ரஹ்மான் என்று பெயர் சூட்டப்பட்டது அல்ஹம்துலில்லா

அல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்டுகிறானோ அவரை வழிகெடுப்பவன்( யாரும்) இல்லை 39 /37
பரம்பரை முஸ்லிம்கள் என்று சொல்லி கொண்டு மறுமையை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் மனோ இச்சையை பின்பற்றி கொண்டிருப்பவர்கள் மத்தியில் அப்துல் ரஹ்மான் அர்சத்திற்கு மறுமை வாழ்வு வடிவில் இஸ்லாம் அவரை அனைத்துகொண்டது அவரையும் நம்மையும் முஸ்லிம்களாக வாழ செய்து முஸ்லிம்களாக மரணிக்க செய்ய அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வோம் நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுகிற விதத்தில்
அஞ்சுங்கள் நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள் 3 /102

Post a Comment

0 Comments