வங்கிப்பணம் ரூ. 1 கோடியை கரைத்த கரையான்கள்

பார்பராங்கி: 
உ.பி. மாநிலத்தில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் பண பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி கரன்சிகள் கரையானால் அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பார்பராங்கி மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை ஒன்று உள்ளது. நேற்று மதியம் பணபரிவர்த்தனைக்காக வங்கியின் மண்டல மேலாளர் கீதா திரிபாதியின் தலைமையில் ஊழியர்கள் வங்கியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பணபெட்டியை திறந்தனர். பெட்டியை திறந்த வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்டியில் கட்டுகட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரன்சிகள் அனைத்தையும் கரையான் திண்றிருப்பது தெரியவந்தது. கரையான்களால் செல்லரித்துப்போன கரன்சிகளின் மதி்ப்பு ரூ. 1 கோடி என வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து உரிய விசா‌ரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ‌கரையான்களால் சேதமடைந்த கரன்சிகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன...


-தினமலர்

இந்திய நாட்டில் மட்டும் தான் இது போல் வித்யாசியமான நிகழ்வுகள் நடைப்பெரும்.

Post a Comment

0 Comments