நபிமார்கள் வரலாறு 7 (ஆதம் நபி வரலாறு 3)

நாத்தீகத்தின் முரண்பாடும் ஆத்தீகத்தின் நீரூபனமும்

உலகின் முதல் மனிதர் யார் என்பதை சொல்வதற்கு முன் மனிதன் படைக்கப் பட்டானா பரிணாமம் பெற்றானா என்ற கேள்விக்குறிய பதிலை பார்த்தோம்.

இப்போது முதல் மனிதன் ஆதாமா? ஏவாளா என்ற சர்ச்சைக்கு தீர்வு காண முயல்வோம்.

நாத்தீகத்திற்கு வக்காலத்து வாங்கும் சில எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் ஆத்தீகத்தை எதிர்பார்ப்பதற்கான மிக முக்கிய வாதங்களில் ஒன்றாக முதல் மனிதர் ஆதாம் அல்ல முதல் மனிதர் ஏவால்தான் என்று சொல்கிறார்கள் அப்படி சொல்வதற்குறிய காரணத்தையும் வாதத்தினையும் ஒன்றன் பின் ஒன்றாக ஆராய்வோம்.
 

நாத்தீகத்தின் வாதம் :

சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்ணின் காலடித்தடத்தை இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

அந்தக் காலடித்தடங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இவள் ஒரு பெண் இவள்தான் உலகின் முதல் மனிதர் என்று கூறுகிறார்கள்.

ஆத்தீகத்தின் பதில் :


அதாவது மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் காலடித்தடம் ஆய்வு செய்யப்படுகிறது அந்த ஆய்வில் இது ஒரு பெண்ணின் காலடித்தடம் என்றும் அவள்தான் உலகின் முதல் மனிதர் என்றும் விஞ்ஞானிகள் முடிவு செய்கிறார்கள்.

இதுதான் அவர்கள் வைக்கும் முதல் வாதம்.

அதாவது மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் காலடியை ஆய்வு செய்தால் அவர் பெண்ணா அல்லது ஆணா என்ற முடிவை சொன்னால் எந்த அறிவாளியும் அதனை மறுக்க மாட்டான் ஆனால் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார் என்பதுதான் அவர் முதல் மனிதர் என்பதற்கான ஆதாரம் என்று யாராவது சொன்னால் அதை எந்த அறிவாளியாவது ஏற்றுக்கொள்வானா?

குறிப்பிட்ட காலடித்தடத்திற்கு சொந்தக்காரர் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார் என்பதால் அவருக்கு முன்பு யாரும் இல்லை அல்லது பிறக்கவில்லை என்று நிருவுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அத்துடன் உலகில் பிறந்த எந்த மனிதனானாலும் அவர்களால் அவர்களின் பலத்தை கொண்டு கற்களில் அடையாளங்களை சிற்பங்களை உண்டு பண்ண முடியுமே தவிர நடக்கும் போதே கால் வைக்கும் இடமெல்லாம் அடையாளம் விழுந்து அதை மூன்று லட்சம் ஆண்டுகள் வரை தாக்குப்பிடித்திருக்கும் என்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நாத்தீகம் சொல்வதைப் போல் குறிப்பிட்ட காலடித்தடம் எது என்பது விஞ்ஞானத்தினால் நிரூபிக்கப்படவோ அல்லது காண்பிக்கப்படவோ இல்லை.வாய் வழியாக வரும் ஒரு கதைதான் இதே தவிர ஆய்வு அல்ல.

நாத்தீகத்தின் வாதம் :

முதல் மனிதர் ஆதாமாக இருந்தால் எப்படி குழந்தை பிறக்கும் அவர்தான் ஆனாயிற்றே?

ஆத்தீகத்தின் பதில் :

முதல் மனிதர் ஏவாள் என்று வைத்துக் கொண்டாலும் இந்தக் கேள்வி எழவே செய்யும்.

முதல் மனிதர் ஏவாள் என்றால் அவர் யாருடன் குடும்பவாழ்வில் ஈடுபட்டார்?

ஒரு பெண்ணுக்கு கண்டிப்பாக ஆண் துணை வேண்டும் ஆண் துணையுடன் அவள் குடும்ப உறவில் ஈடுபடாமல் எப்படி குழந்தையைப் பெற்றெடுப்பாள்.

(குளோனிங் மூலம் குழந்தை பெருவது என்பது தற்கால விஞ்ஞானம் அதனை திருமறைக் குர்ஆனும் ஏற்றுக் கொள்கிறது.இதைப் பற்றிய செய்திகள் பின்னர் விளக்கப் படும்.)

நாத்தீகத்தின் வாதம் :

ஆண் வர்க்கத்தின் துணையின்றி தாங்களாகவே இனவிருத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் உலகில் உள்ளது.உதாரணத்திற்கு அஃபிட்ஸ் என்கிற ஈ வகை ஆண் துணை இன்றி தானே வம்ச விருத்தி செய்து கொள்கிறது.

அது போல் ஏவாளும் வம்ச விருத்தி செய்திருப்பாள்.

ஆத்தீகத்தின் பதில் :

ஆண்களின் துணை இல்லாமல் அஃபிட்ஸ் என்கிற ஈ வர்க்கம் இனவிருத்தி செய்து கொள்கிறது.

அது ஆண்களில் துணையைப் பெருவதே இல்லை என்பதுதான் அதற்குறிய பதில் மனிதன் அப்படியல்ல பெண் என்றால் ஆனின் துனையுடன் தான் இனவிருத்தி செய்கிறாள்.

அஃபிட்ஸ்ஸின் வாழ்நாள் பூராகவும் அதன் தன்மை அதுவாகத்தான் இருக்கிறது.

மனிதனுக்கு அப்படி ஏன் ஏற்படவில்லை.

ஏவாளுடன் மாத்திரம் அது ஏன் நின்று விட்டது?

குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றான் என்றால் அது ஏன் தொடரவில்லை என்பதைப் போல் ஏவாள் தானாக இனவிருத்தி செய்து கொண்டால் அது ஏன் தொடரவில்லை?

ஏவாளுடன் மாத்திரம் ஏன் நின்றது?

ஏவாளுடைய எந்தக் குழந்தைக்காவது இந்த நியதி இருப்பதாக நிரூபிக்க முடியுமா?

ஏவாளுக்கே நிரூபிக்க முடியாத போது அவளுடைய பிள்ளைகளுக்கு எப்படி?

குளோனிங் மூலம் குழந்தையை உருவாக்கினால் கூட ஒரு ஆணுடைய விந்தின் உதவி வேண்டும் அதைக் கொண்டு தான் உருவாக்க முடியும் விஞ்ஞானிகளே இப்படித்தான் கூறுகிறார்கள்.பெண்களுக்காக தனியாக குழந்தையை உருவாக்கும் தன்மையை இறைவன் (நாத்தீகத்தின் பார்வையில் இயற்கை)கொடுக்கவில்லை.

நாத்தீகத்தின் வாதம் :

மனிதர்களில் இரண்டு வகையினர் உள்ளார்கள் ஒன்று இப்போது வாழும் நாம் அதாவது க்ரோமேக்ணன்.

இரண்டு நியாண்டதால் அதாவது நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் நாகரீகம் அற்ற கற்களைக் கொண்டு தங்களை தற்காத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள்.

ஏவாளும் நியாண்டதால் வகையைச் சார்ந்தவரே அவர்களுக்கு இப்படி ஆண் துணை இல்லாமல் குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு தன்மை இருந்திருக்களாம்.

ஆத்தீகத்தின் பதில் :

மனிதர்களை தரம் பிரிக்கும் இந்த அளவு கோள் எங்கிருந்து பெறப்பட்டது.

நியாண்டதால் க்ரோமேக்ணன் என்ற பெயர்கள் நாம் சூட்டிக் கொண்டவைதாம்.
முதலில் நியாண்டதால் என்று ஒரு இனம் வாழ்ந்ததாக யாராலும் நிரூபிக்க முடியாது முதல் மனிதர் ஏவாள் என்பதை எப்படி நிரூபிக்க முடியாதோ அதுபோல் தான் நியாண்டதால் மனிதர்கள் வாழ்ந்ததாக குறிப்பிடும் கதையையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பதை நிரூபிக்க முடியாதலால் அதனை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்பதற்காக கற்பனையாக உருவாக்கப் பட்டதுதான் நியாண்டதால் கதாபாத்திரமே தவிர விஞ்ஞான ரீதியாகவோ அறிவியலின் படியோ நியாண்டதாலுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

அத்துடன் கற்களை மாத்திரம் வைத்து தங்களை தற்காத்துக் கொண்டார்கள் என்ற வாதத்தை வைத்து அவர்களை நியாண்டதால் என்று பிரிப்பதாக இருந்தாலும் அதுவும் எடுபடாத வாதமாக மாறிவிடும்.

அதாவது கற்களை வைத்து தங்களை தற்காத்துக் கொண்டது ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்கக் கூடியதாக இருந்தாலும் அவர்கள் ஒரு வகையில் நம்மை விட அறிவியலில் முன்னேற்றம் கண்டவர்கள் தான்.

போலி விஞ்ஞானத்தினதும் நாத்தீகத்தினதும் கருத்துப் படி நியாண்டதால் மனிதர்கள் அறிவியலில் முன்னேற்றம் காணாதவர்கள்.

அப்படியெனில் எகிப்திய சமுதாயமும் இந்த நியாண்டதால் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள்தாம்.

அறிவியலுக்கு தொடர்பில்லாத சமுதாயத்தினர் இன்றைய விஞ்ஞானமே ஆச்சரியப்படும் வகையில் அமைந்த பிரமிட்டுக்களை எப்படி உருவாக்கினார்கள்?

நாத்தீகத்தின் வாதம் :

க்ரோமேக்னன் மனிதர்களான நாம் ஹோமோ ஸேபியன் (புத்திசாலித்தனமான மனிதன்)கள் நாமது இனத்தை சேர்ந்தவர்தான் நமது தாய் ஏவாள் நமக்கே இவ்வளவு அறிவு வளர்ச்சி என்றால் ஏவாளுக்கு எவ்வளவு இருந்திருக்கும்?

அந்த ஏவாள் தனக்குத் தானே குழந்தையை பெற்றெடுக்கும் அறிவியலைப் பெற்றிருப்பாள்.

ஆத்தீகத்தின் பதில் :

க்ரோமேக்னன் மனிதர்களான நாம் ஹோமோ ஸேபியன் :- அதாவது புத்திசாலி மனிதர்கள் என்றால் நமது தாய் ஏவாளும் புத்திசாலிதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இந்த ஏவாளினால் உருவாகிய நியாண்டதால் எப்படி இந்த அறிவை இழந்தார்கள்?

ஏவாளுடைய சிறப்பான அறிவு நம்மையே வந்தடையும் போது நமக்கு முற்பட்ட நியாண்டதால்(நாத்தீகம் வைத்த பெயர்)இனத்திற்கு எவ்வளவு அறிவு வளர்ச்சி இருந்திருக்க வேண்டும்?

ஏவாளுக்கிருந்த அறிவின் மூலம் தனே குழந்தையைப் பெற்றெடுத்திருந்தால் அவருடைய எந்தக் குழந்தைக்கும் அந்த அறிவு இல்லையே நாம் உற்பட ஏவாளுடைய எந்தக் குழந்தையும் நாத்தீகம் சொல்வதைப் போல் தனக்குத் தானே குழந்தையை உண்டாக்கவும் இல்லை.


..தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஆசிரியர் : ரஸ்மின் MISc

Post a Comment

0 Comments