உணர்வு இதழின் குற்றச்சாட்டை உண்மைப்படுத்திய பாதிரிமார்கள்! – ஒரு விரிவான அலசல்!


பாதிரிமார்கள் அதிகமதிகம் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபடும் நிகழ்வுகள் அளவுக்கதிகமாக பெருகி வருகின்றன. தினந்தோறும் செய்தித்தாள்களைப் புரட்டினால், இவர்கள் பிடிபட்ட செய்திகளை சொல்லாத நாளிதழ்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களது ஆட்டம் தாங்க முடியவில்லை. 
மேலும் 


கிறித்தவ மதத்தினர் நமது நாட்டில் மிகக்குறைந்த சதவீதத்தினரே உள்ளனர். சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக உள்ள கிறித்தவர்களில் பாதிரியாராக மாறுபவர்கள் சொற்பத்திலும் சொற்பமானவர்கள்தான்.
இப்படி மிகக்குறைவான அளவில் இருக்கக்கூடிய இந்த பாதிரிமார்கள் பெரும்பான்மையான மதமாக இருக்கக்கூடிய இந்து மதத்தில் பாலியல் சேட்டை செய்து மாட்டிக்கொள்ளக்கூடிய சாமியார்களைக் காட்டிலும் அதிகமான சதவீதத்தில் கையும் களவுமாக பிடிபடுவதற்குக் காரணம் என்ன என்பதை ஏற்கனவே நாம் உணர்வு இதழில், “பாதிரிகளின் மறுபக்கம்” என்ற தலைப்பில் வெளியான தொடரில் விளக்கியிருந்தோம்.
அந்தக் கட்டுரையில், குறிப்பாக இவர்கள் ஏன் பாலியல் சேட்டைகளை அதிகம் செய்ய வேண்டும், அதற்கென்று பிரத்தியேகமான காரணம் ஏதும் இருக்கிறதா?” என்பதை நாம் விளக்கியிருந்தோம்.
அது குறித்த உணர்வு இதழில் நாம் எழுப்பிய குற்றச்சாட்டை முதலில் பார்த்துவிட்டு, உணர்வு இதழின் குற்றச்சாட்டை இந்தப் பாதிரிமார்கள் எப்படி உணமைப்படுத்தியுள்ளார்கள் என்பதை இப்போது நாம் காண்போம்.
இந்த பாதிரிகள் ஏன் இவ்வளவு பாலியல் சேட்டைகளை செய்கின்றார்கள் என்றால், பாதிரிமார்களின் அத்துனை சேட்டைகளுக்கும் மூல ஆதாரமாக, மகத்தான (?) வழிகாட்டு நூலாகத் திகழும் ஒரு நூல்தான் இவர்களது சேட்டைகள் அனைத்திற்கும் மூலக்காரணியாக திகழ்கின்றது என்பதை நாம் அறிய முடிகின்றது. இந்தப் பாதிரிகளது பாலியல் உணர்வுகளை சீண்டிவிட்டு பல அபலைப்பெண்கள் இந்த பாதிரிகளின் வலையில் சிக்கி சின்னாபின்னமாவதற்குக் காரணமான அந்தப் பாலியல் நூல் எது தெரியுமா?
அது பலான பாலியல் நூல் இல்லை. இவர்கள் தங்களது இறைவேதம் என்று சொல்லி வைத்திருக்கின்றார்களே அந்த பைபிள்தான் இவர்களது இந்தப் பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூடிய நூலாகத் திகழ்கின்றது. பைபிள்தான் இவர்களது இந்த மகத்தான (?) சமூக சேவைக்கு(?) வழிகாட்டும் நூலாகத்திகழ்கின்றது என்றால் அது மிகையல்ல!
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி:
இந்தப் பழமொழி இந்த பாதிரிகளுக்கு முற்றிலுமாக பொருந்திப்போகின்றது. அதற்குக் காரணம் என்ன தெரியுமா?
பல பாதிரிமார்கள் ஏசுவுக்காக என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றேன் என்ற தவறான தூய(?) எண்ணத்தில் துறவறத்தை தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். அவர்கள் நமக்கு இந்த இல்லற வாழ்வும், இல்லற சுகமும் தேவையில்லை என்ற முடிவெடுத்து சும்மாதான் இருக்கிறார்கள்.
ஆனால், சும்மா கிடக்கும் இவர்களை ஊதிக்கெடுக்கும் ஆண்டியாக செயல்பட்டு இவர்களை போண்டியாக ஆக்கும் வேலையை இவர்கள் புனித நூல் என்று கருதும் இறைவேதமே செய்கின்ற தென்றால் நாம் என்ன சொல்வது?
புனித நூலா? பாலியல் நூலா?:
பைபிளில் உள்ள பலான விஷயங்களுடைய தலைப்புச் செய்தியை மட்டும் கீழே தருகின்றோம். தலைப்பே இப்படி இருந்தால், தலைப்பினுள் உள்ள முழுவிஷயங்களையும் பெண்களோடு சேர்ந்து தனிமையில் படிக்கும் பாதிரிமார்கள் மேற்கண்ட சேட்டைகளை செய்யாமல் வேறு என்ன செய்ய முடியும்?
தலைப்பின் விபரங்கள்:
விபச்சார சகோதரிகள்…! – (எசக்கியேல் 23ஆம் அதிகாரம்)
தந்தையும் குமாரத்திகளும்…? – (ஆதியாகமம் 19:31-37)
அண்ணனும் தங்கையும்….? – (இரண்டாம் சாமுவேல் 13:1-15)
மாமனாரும் மருமகளும்….? – (ஆதியாகமம் 38:14-19)
மைத்துனனும் மைத்துனியும்….? – (ஆதியாகமம் 38:8-10)
தாவீதும் அடுத்தவர்மனைவியும்….? – (இரண்டாம் சாமுவேல் 11:2-18)
கிழவனும் குமரியும்…..? – (முதலாம் ராஜாக்கள் 1:1-3)
இதிலுள்ள மோசமான கேடுகெட்ட தனம் என்னவென்றால், இந்த கேவலங்களையெல்லாம் செய்தவர்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் என்று சொல்வதுதான் கொடுமையிலும் கொடுமை.
இந்தப் பாலியல் சேட்டைகள் அனைத்தையும் இறைவனால் ஆசிவழங்கப்பட்ட தீர்க்கதரிசிகளே செய்திருக்கும்போது, இத்தகைய பலான செயல்களையெல்லாம் செய்வதன் மூலம் தீர்க்கதரிசிகளுக்கு இறைவனுடைய ஆசி கிடைத்திருக்கும் போது, பாதிரிமார்களான நாமும் அந்த தீர்க்கதரிசிகளை முன்மாதிரியாகக் கொண்டு சமூக சேவையாற்ற (?) வேண்டும், தீர்க்கதரிசிகள் இறைவனுடைய ஆசியைப்பெற்றது போல நாமும் இறைவனுடைய ஆசியைப்பெற்றே தீருவது என்று இவர்கள் முடிவெடுத்ததன் விளைவுதான் இவர்களது பாலியல் சேட்டைகளின் படையெடுப்பு.
மேற்கண்ட வசனங்களை இவர்கள் இரவு நேரங்களில் சிறப்பு ஜெபக்கூட்டங்கள் என்ற பெயரில் பெண்களோடு சேர்ந்து வாசிப்பார்களேயானால் இரவு நேர ஜெபக்கூட்டங்கள் கூடுமா? குறையுமா? இப்போது புரிகின்றதா? இரவு சிறப்பு ஜெபக்கூட்டங்களும், பாதிரிகளின் பாலியல் சேட்டைகளும் அதிகரிக்க காரணம் என்னவென்று. இதுதான் பாதிரிகளின் பலான மறுபக்கம்.
ஏற்கனவே நாம் மேற்கண்டவாறு குற்றச்சாட்டு சுமத்தியிருந்தோம். நாம் சுமத்திய குற்றச்சாட்டை அப்படியே நூறு சதவீதம் உண்மைப்படுத்தும் விதமாக அனைத்துத் தரப்பு கிறித்தவ மக்களாலும் அறியப்பட்ட ஒரு பாதிரியார் சமீபத்தில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
அது குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்தி :
பிரபல கிறித்தவ போதகர் மீது பரபரப்பு செக்ஸ் புகார்!
ஜூலை 3ம் தேதி பெரும் பிரபலமான ஒரு கிறித்தவப் போதகர் மீது அவர் சார்ந்த கிறித்தவ அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களே பரபரப்பான செக்ஸ் புகார்களை சுமத்தியுள்ளனர். இன்னொரு நித்தியானந்தாபோல அவர் செயல்படுவதாகவும் அவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர்.
அவரது பெயர் வின்சென்ட் செல்வக்குமார். பிரபலமான ஏஞ்சல் டிவியின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவர் இவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு எதிராகத்தான் தற்போது கிறித்தவர்கள் கொந்தளித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் வசித்து வருகிறார் வின்சென்ட்செல்வக்குமார். பாதிரியாராகவும் இவர் இருக்கிறார். இவர் ஜெப ஆலயம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
கிறித்தவர்கள் மத்தியில் வின்சென்ட் செல்வக்குமார் மீதான புகார்கள் பெரும் அதிர்ச்சி அலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துவர்கள் மத்தியில் பிரபலமான ஏஞ்சல் டி.வி.யின் அறிவிக்கப்படாத ஓனர். ராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிகவும் பிரபலமான கிறிஸ்துவ பாதிரியாரும் தீர்க்கதரிசியுமான(?)வர் வின்சென்ட் செல்வக்குமார். இவருக்கு எதிராக இவரது சபை விசுவாசிகளே கொதித் தெழுந்திருக்கிறார்கள். என்ன காரணம்? என்று தோண்ட ஆரம்பித்த போதுதான் “கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்’ என்ற பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் விசுவாசிகள் பலரும்.
ராமநாதபுரம் அண்ணா நகரில் உள்ளது பிரபல பாதிரியார் வின்சென்ட் செல்வக்குமாரின் தீர்க்கதரிசன மையமாக மாற்றப்பட்ட ஜெப ஆலயம். ஆனால், அவரின் லீலைகளைக் கண்டு நொந்துபோன 500-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் அவரிடம் சண்டைபோட்டுவிட்டு ராமநாதபுரம் வலம்புரி கல்யாண மஹாலில் தங்களது கிறிஸ்துவ ஆராதனையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மஹாலில் ஆராதனை நடத்திவருபவர்களும் வின்சென்ட் செல்வக் குமாரோடு பல வருடங்கள் ஊழியத்தில் இணைந்து பணியாற்றிய பாஸ்டர்களுமான ஜான் டேனியல், ஏசாயா மற்றும் சபை மூப்பர்கள் வேதனையோடு பேச ஆரம்பித்தார்கள் “கர்த்தரோட ஊழியத்துக்காகத்தான் கல்யாணம் கூட பண்ணிக்காம இருக்கிறதா சொல்லி ஆரம்பத்துல ஒரு பத்து குடும்பங்களை முதுகெலும்பா வெச்சுத்தான் இந்த ஊழியத்தை ஆரம்பிச்சாரு. 500-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் வர ஆரம்பிச்சாங்க. போகப்போக உபவாச ஜெபம், ஸ்பெஷல் மீட்டிங் என்றால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்தாங்க. ஆனா, சில வருடங்களில் சபை விசுவாசிகள் திடீர், திடீர்னு சர்ச்சை விட்டு வேற சர்ச்சுகளுக்கு போயிக்கிட்டிருந்தாங்க. குறிப்பா, வின்சென்ட் செல்வக்குமாருக்கு ரொம்ப ரொம்ப பக்கபலமா இருந்த பத்து குடும்பங்கள்ல உள்ளவங்களும், வின்சென்டோட சொந்த மாமா குடும்பமும் வெளியேறினதுதான் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.
“பைபிளில் அஸ்தரோத்தின் ஆவின்னு ஒண்ணு இருக்கு. அது விபச்சாரத்தின் ஆவி. அதை அழிக்கக்கூடிய தூதனாகத்தான் ஆண்டவர் என்னை தேர்ந்தெடுத் துருக்காரு. அந்த விபச்சாரத்தின் ஆவியை நான் அழிக்கணும்னா ஆணாக இருந்தால் அழிக்க முடியாது. பெண்ணா மாறினாதான் அழிக்கமுடியும். ஆண்டவர் எனக்கு வெச்ச பேரு பத்மா. நான் ஆம்பளை இல்ல. நான் கொஞ்சம் கொஞ்சமா பெண்ணா மாறிக்கிட்டிருக்கேன். எனக்கு கர்ப்பப்பை இருக்கு. இன்னும் கொஞ்ச நாளில் முழுமையா பெண்ணா மாறிடுவேன். இதை நான் யார்க்கிட்டேயும் சொல்லல. நீங்களும் யார்க்கிட்டேயும் சொல்லாம எனக்காக ஜெபம் பண்ணுங்க’’ அப்படின்னு பெண் பிள்ளைகள் இருக்குற பெற்றோர்களிடம் சொல்லி பைபிள் வசனங்களை வாசித்துக்காண்பித்து அல்லது அந்த அசிங்கமான ஆபாச வசனங்களை பெண்களைப் படிக்கச் சொல்லி அதன் பிறகு அவர்களை சீரழித்து சின்னாபின்னமாக்குவதுதான் இவரது தேவ(?) ஊழியம்.
அதுமட்டுமல்லாமல் வின்சென்ட் செல்வக்குமார் பல்வேறு பாலியல் முறைகேடுகளில் மோசமான முறையில் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் குமுறுகிறார்கள்.
வின்சென்ட்டின் மோசமான செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்து அவரது சொந்த பந்தங்களும் கூட இந்த சபையிலிருந்து விலகி விட்டதால் பரபரப்பு கூடியுள்ளது.
பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டி இவர் செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவதாக குமுறலுடன் கூறுகிறார்கள் இவர்கள். பைபிளில் கூறியுள்ள ஆபாசமான வசனங்களையும், அறுவருக்கத்தக்க சம்பவங்களையும் ஒவ்வொன்றாக பெண்களிடம் கூறி அவர்களிடம் உறவு கொள்வதும், அவர்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குவதும் இவர் வழக்கம்.
பெண்கள் மீது கை போட்டு பேசுவது, முத்தமிடுவது, பெண்கள், மாணவிகளின் உடைகளை தான் அணிந்து கொள்வது, பெண்களிடம் பாலை கொடுத்து குடிக்கச் சொல்லி விட்டு பாதியில் வாங்கி தான் குடிப்பது, நைட்டி, புடவையில் இருப்பது, நைட்டி உடையை அணிந்து கொண்டு பெண்களிடம் தவறான உறவு கொள்வது என சகலவிதமான அசிங்கமான செயல்களிலும் இவர் ஈடுபட்டு வருகிறார்.
தனது சபையில் வேலை பார்க்கும் வேலைக்காரப் பெண்ணைக் கூட இவர் விடுவதில்லை. இவர் ஒருமுறை ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தபோது அதை அவரது உறவுக்காரப் பெண் ஒருவர் பார்த்து அதிர்ந்து போய் விட்டார்.
சிறுமிகளையும் கூட இவர் விடுவதில்லை. பல சிறுமிகளிடம் இவர் பாலியல் சில்மிஷங்களைச் செய்துள்ளார்.
வின்சென்ட் செல்வக்குமாருக்கு பிரபலமான போதகரான சென்னையைச் சேர்ந்த மோகன் லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் உள்ளிட்டோர் இவருக்கு ஆதரவாக உள்ளதாக இவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இப்படி ஒரு மதத்தினுடைய வேதப்புத்தகம் என்று சொல்லக்கூடிய ஒரு நூலே பாதிரியார்களை உசுப்பேற்றிவிட்டால், பாவம் அவர்கள் என்னதான் செய்வார்கள்?
இப்படி இவர்கள் செய்யக்கூடிய அத்துனை பாலியல் சேட்டைகளுக்கும் அவர்களது வேதகாமம்தான் காரணமாக உள்ளது என்றால் இவர்களை என்னவென்பது?
இந்த பாதிரியார் கையும் களவுமாக பிடிபட்ட சில வாரத்திற்குள் இது போல கையும் களவுமாக பிடிபட்ட இதர பாதிரிகளின் செய்திகளையும் உங்களுக்குத் தொகுத்து வழங்குகின்றோம்.
வேலூரில் வேலையைக் காட்டிய பாதிரியார்:
பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிரோஷா (வயது21). இவரும் பொகளூர் பங்கரிஷி குப்பத்தை சேர்ந்த கிறித்தவ பாதிரியார் ரவிக்குமார் என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
இது நிரோஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. காதலை ஏற்க மறுத்த பெற்றோர் நிரோஷாவை அவரது அத்தை மகனான பல்லலகுப்பத்தைச் சேர்ந்த பிரபாகரன்(25) என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் முடிந்தாலும் காதலன் பாதிரியார் ரவிக்குமாரை நிரோஷாவால் மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி நிரோஷா தன் வீட்டில் இருந்து 10 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் மாஜி காதலனான பாதிரியார் ரவிக்குமாரை 2-வது திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதையறிந்த பிரபாகரன் தன்னை மனைவி ஏமாற்றி விட்டதாக மேல்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்கு பதிவு செய்து நிரோஷா மற்றும் ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தவன் மனைவியோடும், அவனது சொத்துக்களையும் சேர்த்து அபேஸ் செய்து கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு காமவெறி இவர்களுக்கு தலைக்கேற காரணம் என்ன? நாம் முன்னர் குறிப்பிட்டுள்ள காரணத்தைத் தவிர வேறு என்ன காரணமாக இருக்கும்?
பரங்கிமலையில் சிறப்பு ஜெபம் என்ற பெயரில் சில்மிஷம் செய்த பாதிரியார்!
சென்னை பரங்கிமலையில் உள்ள பாதிரியார் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்தப் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரங்கிமலையில் உள்ள புனிதமேரி பள்ளியில் ரெஜினா என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் பரங்கிமலை ஆலய பாதிரியாரான பிரேம் குமார் தன்னை பலமுறை கற்பழித்து விட்டதாகவும், ஆனால், திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பாதிரியார் பிரேம் குமாரை கைது செய்துள்ள பரங்கிமலை மகளிர் போலீசார், அவரை மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக செங்கல்பட்டிற்கு கொண்டு சென்றனர்.
பாதிரியார் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி செய்தித்தாள்களை திறக்கும் பக்கங்களிலெல்லாம் இத்தகைய செய்திகள் இருப்பதற்குக் காரணம், உன்னதப்பாட்டு போன்ற ஆபாசக் காவியங்களை ஜெபக்கூட்டங்களில் படித்து சேட்டை செய்வதுதான் காரணம்.
எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் என்று சொல்வார்களே! அதுபோல் அவர்கள் ஆபாசப் புத்தகத்தைப் படிப்பதை நிறுத்தினால்தான் தினம் தினம் பிடிபடும் பாதிரிகளின் சில்மிஷச் சேட்டைகள் குறையும். செய்ய முன்வருவார்களா?
அவர்கள், தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். எனவே அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேண வில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.
அல் குர்ஆன் 57:27

Post a Comment

0 Comments