கண்டன ஆர்ப்பாட்டம் -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  கீழக்கரை தெற்கு கிளை இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்.சார்பில் 1.6.2015 திங்கள்கிழமை தவ்ஹீத் சகோதரிகளின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து ரெகுநாதபுரத்தில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
காலை 11 மணியளவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு கீழக்கரை தெற்கு கிளையிலிருந்து 6 வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் சென்று கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.......




ஆர்ப்பாட்ட. களத்திலும் தாஃவா செய்யும் கீழக்கரை தெற்கு கிளை மகளிர்அணியினர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் ரெகுநாதபுரத்தில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கீழக்கரை தெற்கு கிளை மகளிர்அணியினர் ஆர்ப்பாட்டம் முடிந்து ரெகுநாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் மாட்டியிருந்த இணைவைப்பு பொருட்களை அதன் தீமைகளை எடுத்துச்சொல்லி அகற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments