பெண்கள் குழுவின் மருத்துவமனை தஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 13-12-2018 வியாழக்கிழமையன்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் மகளிர் அணியின் அழைப்புப் பணி நடைபெற்றது.
இதில் அங்கே பெண்கள் பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 உள்நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு, அவர்களின் நோய் குணமடைய அல்லாஹ்விடம் துஆ செய்ததோடு நோயாளிகள் உட்பட பல நபர்களிடத்தில் "யார் இவர்" என்ற துண்டு பிரசுரம் விநியோகம் செய்து அழைப்புப்பணி செய்யப்பட்டதுடன் திருக்குர்ஆனை பற்றி அறிமுகமும் செய்யப்பட்டது.
பெண்களினுடைய இந்த தஃவா பணி பிறமத சகோதரிகளுக்கு மத்தியில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!!!








Post a Comment

0 Comments