மாணவ கருத்தரங்க நிகழ்ச்சி - கீழக்கரை T.N.T.J



அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த 15- 01- 2010 அன்று கீழக்கரை T.N.T.J. தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற அணைத்து சமுதாய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற மாணவ கருத்தரங்க நிகழ்ச்சியில் மண்டல மாணவரணி செயலாளர் சகோதரர்: கலீலுர் ரஹ்மான் M.B.A அவர்கள் சிறப்பாக விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...!


இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் சகோதரர்: "சங்கு" அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

மேலும் இந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர்: ராசிக்தீன் M.B.B.S. மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் :முஹைதீன் பிச்சை B.A.Bed அவர்களும் மாணவர்களிடையே சிற்றுரை நிகழ்த்தினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியின் தொகுப்புகளை www.tntj.net என்ற இணையதளத்திலும் காணலாம்.

Post a Comment

0 Comments