ஸக்காத் எனும் ஏழை வரி. (தொடர் 01)


மனித குலத்துக்கு சிறப்பான வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் உலக மக்களுக்கு இஸ்லாத்தின் அனைத்து செயல்பாடுகளையும் மிகச் சிறப்பான முறையில் தெளிவுபடுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அந்த வகையில் உலகில் வாழும் காலத்தில் செல்வந்தர்களாக அல்லாஹ் யாரையெல்லாம் ஆக்கியிருக்கிறானோ அவர்கள் தங்கள் செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதையும், அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் தனது திருமறைக் குர்ஆனிலும், நபியவர்களின் பொன் மொழிகளிலும் இறைவன் தெளிவாக அறிவித்துத் தந்துள்ளான்.

பணக்காரர்கள் தங்களின் சொத்துக்களை சரியான முறையில் இறை திருப்தியைப் பெரும் வகையில் செலவு செய்ய வேண்டும் என்பதினால் அவர்களின் சொத்துக்களை தூய்மைப்படுத்தும் விதமாக ஸக்காத் என்ற ஒரு கடமையை இறைவன் கட்டாயமாக்கியிருக்கிறான்.
ஸகாத் என்பது செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும்,பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் ஏராளமான ஹதீஸ்களும் திருமறை வசனங்களும் ஸகாத் கட்டாயக் கடமை என்பதைப் பல்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துரைக்கின்றன 

இன்று நமக்கு மத்தியில் இருக்கும் பல செல்வந்தர்களுக்கு ஸக்காத்தின்உண்மைத் தாத்பரியம்முக்கியத்துவம் புரியாமல் இருக்கிறது.

ஸக்காத் என்று நினைத்துக் கொண்டு ஏழைகளை வரிசையாக நிறுத்தி வைத்து ஐந்து ரூபாய் நாணயங்களை பங்கு வைப்பவர்கள், அரிசி, பருப்பு, என்று தானியங்களின் பொதியை பேனர் வைத்து போட்டோ பிடித்து படம் காட்டிப் பங்கு வைப்பவர்கள், என்று பலரும் தாங்கள் செய்யும் இந்தக் காரியங்கள் ஸக்காத்தில் அடங்கிவிடுகின்றன, இதுதான் ஸக்காத்தின் நடை முறை, அதனால் நாம் ஸக்காத் கொடுத்துவிட்டோம் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

ஆனால் இஸ்லாம் சொல்லும் ஸக்காத்தின் முறைமையோ வித்தியாசமானதாகும். ஸக்காத்தின் முக்கியத்துவம் என்ன அதை சரியான முறையில் நிறைவேற்றாவிட்டால் ஏற்படும் குற்றம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம்  ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும்முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. (கடமைப்பட்டவர்கள்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: புகாரி 8

இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து தூண்களைப் பற்றி குறிப்பிடும் நபி (ஸல்) அவர்கள் அதில் மூன்றாவது அம்சமாக ஸக்காத் வழங்குவதை வலியுறுத்துகிறார்கள்.

ஸக்காத் என்பது எவ்வளவு முக்கியமான கடமை என்பதை மிகத் தெளிவாக நாம் அறிந்துகொள்ள முடியும்.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும்,உறுதியாக நிற்குமாறும்தொழுகையை நிலை நாட்டுமாறும்,ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.  (அல்குர்ஆன் 99:5)

வார்த்தை விளக்கம்.

ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல்அதிகமாகுதல்,தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது. அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாக்கியங்களை அதிகப்படுத்துகிறான். இதன் காரணமாகத் தான் முஸ்லிம்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து கணக்கிட்டு குறிப்பிட்ட விகித்தாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாய தர்மத்திற்கு ஸகாத் என்று இறைவன் பெயர் சூட்டியுள்ளான்.

செல்வந்தர்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும்,உறுதியாக நிற்குமாறும்தொழுகையை நிலை நாட்டுமாறும்,ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.  (அல்குர்ஆன் 99:5)

இறைவன் முஃமின்கள் மீது விதியாக்கிய கட்டளைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது ஸக்காத்தைக் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளதாக குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

யாசிப்போருக்கும்ஏழைகளுக்கும்அதை வசூலிப்போருக்கும்,உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும்அடிமை(களை விடுதலை செய்வதற்)கும்கடன்பட்டோருக்கும்அல்லாஹ்வின் பாதையிலும்நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:60)

மேலுள்ள வசனத்தில் ஸக்காத்தைக் குறிப்பிடுவதற்கு இறைவன் தர்மம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். தர்மம் என்பது ஸக்காத்தைத் தான் குறிப்பிடப்படுகிறது என்பதை “இது அல்லாஹ்வின் கட்டாயக் கடமை'' என்ற வசனத்தின் இறுதி வாசகம் நமக்குத் தெளிவாக விளக்குகிறது.

ஸக்காத் கொடுக்காதவன் இறை நம்பிக்கை அற்றவன்.

ஸக்காத்தை சரியாக கணக்கிட்டு கொடுப்பது இறை நம்பிக்கையில் ஒரு பகுதி என்பதை நபியவர்கள் தெளிவாக குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சான்று பகர்வதும்தொழுகையை நிலை நாட்டுவதும்ஸகாத் கொடுப்பதும்போர்ச் செல்வங்கல் ஐந்தில் ஒரு பங்கை (அரசு பொது நிதிக்கு) வழங்குவதும் ஆகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: புகாரி 7556

யார் ஸக்காத்தை சரியான முறையில் கணக்கிட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கவில்லையோ அவர் ஈமான் அற்றவர் என்பதை நபியவர்களின் வார்த்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

செல்வத்தை இறைவன் தருவதின் நோக்கமே ஸக்காத் கொடுக்கவேண்டும் என்பதே.

நமது வாழ்வில் நாம் சம்பாதிக்கும் செல்வங்கள் அனைத்தும் நமக்கு உரியவைகள் அல்ல. நமது உழைப்பால், முயற்சியால் நாம் அவற்றைப் பெற்றுக் கொள்ளவில்லை. இறைவனின் அருளின் காரணமாகத் தான் நமக்கு செல்வம் கிடைக்கிறது அந்த செல்வம் கூட நமது தேவையை விட அதிகமாகத்தான் இருக்கிறது. அப்படி அதிகமாக இறைவன் தருவதின் காரணம் அதில் ஏழைகளின் உரிமை கலந்துள்ளது என்பதுதான்.

அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும்இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும்.   (அல்குர்ஆன் 70:24, 25)

இறைவன் செல்வத்தை நமக்கு தந்திருப்பதின் நோக்கமே ஸகாத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் என்பதைப் பின்வரும் நபிமொழியும் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அபூ வாகிதில் லைஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மீது இறைச் செய்தி அருளப் பெற்ற (கால கட்டத்தில்) நாங்கள் அவர்களிடம் வருபவர்களாக இருந்தோம். அவர்கள் அதனை எங்களுக்கு அறிவிப்பார்கள். ஒரு நாள் அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்:

கண்ணியமானவனும்யாவற்றையும் மிகைத்தவனுமாகிய அல்லாஹ் கூறினான்: நான் செல்வத்தை வழங்கியிருப்பதே தொழுகையை நிலை நாட்டுவதற்காகவும்ஸகாத்தை நிறைவேற்றுவதற்காகவும் தான். ஆதமுடைய மகனிற்கு (செல்வத்தால்) ஒரு கணவாய் இருந்தாலும் அவன் இரண்டாவதும் தனக்கு இருப்பதற்கு ஆசைப்படுவான். அவனுக்கு இரண்டு கணவாய்கள் இருந்தால் அவன் அந்த இரண்டுடன் மூன்றாவதும் தனக்கு ஆவதற்கு ஆசைப்படுவான். ஆதமுடைய மகனின் வயிற்றை மண்ணைத் தவிர வேறு எதுவும் நிரப்பாது. பிறகு யார் பாவ மன்னிப்புக் கோரி மீள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பை வழங்குகிறான். (நூல்: அஹ்மத் 20900)

செல்வம் வழங்கப்பட்டதின் நோக்கம் ஸக்காத் கொடுப்பதுதான் என்பதை மேற்கண்ட செய்தி சந்தேகமற நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

ஸக்காத்தைப் பற்றி நபியவர்களின் உபதேசம்.

நபித் தோழர் முஆத் (ரலி) அவர்களை யமனுக்கு ஆளுனராக நபியவர்கள் அனுப்பிவைக்கும் போது ஸக்காத்தின் கடையைப் பற்றி அந்த மக்களிடம் பிரச்சாரம் செய்யும்படி உபதேசம் செய்தே அனுப்பினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லைநான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்றுஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: புகாரி 1395

பொதுவாக தர்மம் என்பது நமக்கு நன்மைகளை பெற்றுக் தரக் கூடிய ஒருஅம்சமாகும். ஆனால் ஸக்காத் என்பது இறைவனின் கட்டளைக்கிணங்க நாம் அதனை நடை முறைப்படுத்தினால் நன்மையைப் பெற்றுத் தரும் அதே நேரம் ஸக்காத்தை கொடுக்காவிட்டால் கண்டிப்பாக பாவத்தை இறைவன் விதியாக்கி மறுமையில் தண்டிப்பான்.

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு)  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)'' என்றார்கள். அவர் "இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?''என்று கேட்க, "இல்லைநீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், "இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' எனக் கேட்க, "இல்லைநீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், "இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லைநீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர''என்றார்கள்.  அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்குறைக்கவும் மாட்டேன்'' என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்'' என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)நூல்: புகாரி 46

மேற்கண்ட செய்தியில் ஸக்காத்தை கட்டாயம் நிறைவேற்றும் படி நபியவர்கள் குறிப்பிட்ட மனிதனுக்கு வலியுறுத்தும் ஆதே நேரத்தில் அதுவல்லாத தர்மங்களை நீ விரும்பிச் செய்து கொள்ளலாம் என்றும் அனுமதிக்கிறார்கள்.

வறுமை தாண்டவமாடிய அரேபிய தேசத்தில் பணக்காரன் எப்போதும் பணக்காரணாகவே இருந்தான் அதே போல் ஏழை ஏழையாகவே இருந்து அன்றாடம் கஷ்டத்தில் துவண்டுகொண்டிருந்தான்.

அந்த சந்தர்ப்பத்தில் தான் ஸக்காத் என்ற ஏழை வரியை இஸ்லாம் அறிமுகப்படுத்தி ஏழைகளின் கண்ணீர் துடைத்து அவர்களின் வறுமைக்கு சரியான தீர்வு சொல்லியது. வருமை ஒழிப்பில் முதலிடம் வகிக்கும் இந்த ஸக்காத் நிதியை செல்வந்தர்கள் கண்டிப்பாக சரியான முறையில் கொடுத்துவிட வேண்டும்.

மலையில் வசித்தாலும் ஸக்காத் கொடுத்தே ஆக வேண்டும்.

எந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சி இருக்கிறதோ அந்த நாடுகளில்அரசாங்கமே ஸக்காத்தை வசூல் செய்து ஏழைகளுக்கு விநியோகம்செய்துவிடுவரார்கள். இதே நேரத்தில் இஸ்லாமிய அரசு இல்லாத நாடுகளில் வசிப்பர்களிடம் யாரும் ஸக்காத் வசூல் செய்யாவிட்டாலும் அவர்களும் தங்களின் ஸக்காத் தொகையை ஏழைகளுக்குப் பங்குவைக்க வேண்டும். செல்வம் கொடுக்கப்பட்டவன் மலை உச்சியில் இருந்தாலும் சரியே.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் (குழப்ப நேரங்களில்) தமது சிறிய ஆட்டு மந்தையுடன் இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில்அல்லது இந்தப் பள்ளத்தாக்குகளில் ஒன்றின் நடுவில் தொழுகையை நிலைநாட்டிஸகாத்தை வழங்கி,மரணம் வரும் வரையில் தம் இறைவனை வழிபட்ட வண்ணம் வசித்து வருகிறார். மக்களில் இவரும் நன்மையிலேயே உள்ளார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 3838

ஸக்காத்தை கொடுக்காதவர்கள் விஷயத்தில் இஸ்லாமிய அரசின்முடிவு.

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் ஸகாத் வழங்க மறுப்பவர்களிடம் போரிட்டாவது ஸகாத்தைப் பெற வேண்டியது அரசாங்கத்தின்கடமையாகும். ஒருவன் அல்லாஹ்வை நம்புகிறேன் என்று வாயால் மொழிந்த பிறகு  தொழுகையை நிலைநாட்டிஸகாத்தையும் நிறைவேற்றும் போது தான் வெளிப்படையில் அவனை ஒரு முஸ்லிம் என்று இஸ்லாமிய அரசாங்கம் தீர்மானிக்கும்.

வெளிப்படையில் தொழுகையை நிலைநாட்டிஸகாத்தையும் நிறைவேற்றுபவர்கள் மீது போர் தொடுப்பதும்அவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதும் மாபெரும் குற்றமாகும்.

புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டுதொழுகையை நிலை நாட்டிஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்.   (அல்குர்ஆன் 9:5)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லைமுஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்'' என உறுதிமொழிந்து, (கடமையான) தொழுகையை நிலைநிறுத்திஸகாத் (எனும் ஏழைகளின் உரிமையை) வழங்காத வரை (இணை வைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன். இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால் தம் உயிரையும் உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர! மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.
அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)நூல்: புகாரி 25

இஸ்லாமிய அரசின் கீழ் உள்ளவர்கள் யாராவது ஸக்காத் என்ற ஏழைகளின் உரிமையை தர மறுத்தால் அவர்களுடன் அரசு யுத்தம் செய்தாவது ஸக்காத்தை வசூல் செய்ய வேண்டுமென்பதை மேற்கண்ட செய்தியின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.

அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களின் முடிவு.

நபியவர்கள் மரணித்ததற்குப் பின்னால் ஸக்காத்தை தர முடியாது என்று சிலர் மறுப்புத் தெரிவித்தார்கள். அப்போது ஆட்சியாளராகஇருந்த அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அவர்களுடன் போர் செய்வதற்கே தயாராகிவிட்டார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) காஃபிர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர் தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள், "லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) கூறியவர் தமது உயிரையும் உடமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார்தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர! அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது'என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போதுநீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?'' என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள்உமரை நோக்கி, "அல்லாஹ்வின் மீது ஆணையாகதொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத்,செல்வத்திற்குரிய கடமையாகும்அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்'' என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்''என்றார்கள். (நூல்: புகாரி 1400)

இஸ்லாமிய அரசு என்ன முடிவை எடுக்க வேண்டுமோ அந்த முடிவை யாருக்கும் அஞ்சாமல் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் எடுத்தார்கள். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...........

Post a Comment

0 Comments